பாஸ்டாக் பயன்பாட்டாளரின் எண்ணிக்கை 96% ஆக உயர்வு

by Admin / 03-08-2021 12:31:19pm
பாஸ்டாக் பயன்பாட்டாளரின் எண்ணிக்கை 96% ஆக உயர்வு



சுங்கச்சாவடியில் பாஸ்டாக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 96 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 
சுங்கச்சாவடியில் பாஸ்டாக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 96 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்க சாவடிகளில் கடந்த பிப்ரவரி மாதம் பாஸ்டாக் கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், நாட்டில் பாஸ்டாக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 80 சதவீதத்தில் இருந்து 96 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் தொழில்நுட்ப ரீதியான கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், நெடுஞ்சாலை துறையின் வளர்ச்சியை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via