தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டம் - டிடிவி தினகரன் கண்டனம்

by Staff / 28-01-2024 01:06:26pm
தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டம் - டிடிவி தினகரன் கண்டனம்

தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில ஆளுநரின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கு தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via