திமுக-காங். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்

by Staff / 28-01-2024 03:53:01pm
திமுக-காங். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய்குமார், தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை பங்கேற்றுள்ளனர். மேலும் திமுக தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், க.பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோருடன் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் கொடுக்கிறது காங்கிரஸ்.

 

Tags :

Share via