தமிழகத்தில் முதலீடு செய்யும் ஸ்பெயின் நிறுவனம்

by Staff / 31-01-2024 01:49:39pm
தமிழகத்தில் முதலீடு செய்யும் ஸ்பெயின் நிறுவனம்

தமிழ்நாட்டில் தொழில் செய்ய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Mr. Rafael Mateo. Mr. Manuel Manjón Vilda, CEO Water Division அவர்களும் தமிழக முதலமைச்சரும் சந்தித்து பேசிய நிகழ்வில், காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது எனவும், ஆக்சியோனா நிறுவனம் முதலீடு செய்ய உகந்ததாக தமிழகம் இருக்கும் என எடுத்துரைக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.

 

Tags :

Share via