நான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது - மம்தா

by Staff / 31-01-2024 04:30:37pm
நான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது - மம்தா

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நாடு முழுவதும் ஒரு வாரத்தில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக பாஜக மீண்டும் CAA விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால், தான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் அதைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 2020 யில் மேற்கு வங்க சட்டப் பேரவையில் CAA க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via