ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான இந்தியா - கனடா உளவுத்துறை

by Staff / 03-02-2024 04:50:28pm
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான இந்தியா - கனடா உளவுத்துறை

இந்தியாவின் தலையீட்டால் கனடா ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்த நாட்டின் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது. கனடா தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அவ்வமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் , கனடா தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக எச்சரித்துள்ளது. சமீபத்தில் கனடாவில் வசிக்கும் சீக்கிய கிளர்ச்சியாளரின் கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டுள்ளது என்று கனடா பிரதமர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via