போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது

by Staff / 18-02-2024 11:57:31am
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரியில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஜியா உல் ஹக் (44) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 5ஆம் வகுப்பு மாணவிகளிடம் இவர் செல்போனில் ஆபாச புகைப்படங்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். தலைமை ஆசிரியர் மேச்சேரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். இதனையறிந்த ஆசிரியர் ஜியா தலைமறைவானார். இந்த வழக்கு மேட்டூர் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த ஆசிரியர் ஓமலூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் ஆசிரியரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via