கணவன் நடத்தையில் சந்தேகம் 7 மாத கர்ப்பிணிபெண் 2 வயது குழந்தையோடு கிணற்றில் விழுந்து தற்கொலை.

by Editor / 22-02-2024 12:20:18am
கணவன் நடத்தையில் சந்தேகம் 7 மாத கர்ப்பிணிபெண் 2 வயது குழந்தையோடு கிணற்றில் விழுந்து தற்கொலை.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் தேவர் திருமண மண்டபம் தெருவினை  சேர்ந்தவர் மாரியப்பன் 26 கரவை மாடு பால் கறக்கும் தொழிலை செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தைச் சேர்ந்த  இவருக்கும் தேவிபட்டணம் முருகன் என்பவருடைய மகள் காளீஸ்வரி வயது 23 என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி தேவிப்பட்டினத்தில்  உள்ள தேவர் திருமண மண்டபத் தெருவில் வசித்து வருகிறார்கள் இவர்களுக்கு கவி பிரசாத் என்ற இரண்டு வயதுள்ள ஆண் குழந்தை உள்ளது  சம்பவத்தன்று நேற்று மாலை 4 மணி அளவில் ஊருக்கு மேற்கே மூணு கிலோமீட்டர் தொலைவில் உள்ளதனியார் கிணற்றில் குழந்தை யின் உடல் மிதப்பதாக சிவகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது இதனை அறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி மற்றும் போலீசார்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த நிலைய அலுவலர் கருப்பையா  தலைமையிலானார் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்  அப்போது இரண்டு வயது  வயது நிரம்பிய கவி பிரசாத்தின் உடல் கிணற்றில் மிதந்ததை கண்டுபிடித்தனர் அதை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸில் சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர் மேலும்தேடுகையில் ஏழு மாதம் நிறைந்த கர்ப்பிணி பெண்ணின் உடலை கண்டுபிடித்து கிணற்றில் இருந்து மீட்டனர். இருவரின் உடல்களை சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிரதசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் உடல்கள் மிகவும் சிதைந்த  நிலையில் இருந்ததாலும் மேலும் 7 மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்ததால் பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை கை கிரவுண்ட்  ஆஸ்பத்திரிக்கு அனுப்பிக்கப்பட்டது. இறந்த  காளீஸ்வரியின் கணவர் மாரியப்பன் அடிக்கடி செல்போனில் பெண்களிடம் பேசியதாக கூறப்ப்டுகிறது..இதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை நடந்து பின்னர் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.இந்தநிலையில் இருவர் தரப்பு குறித்து காளீஸ்வரியின் கணவன் மாரியப்பனை சிவகிரி போலீசார் விசாரணை செய்து வருகிறனர். இது குறித்து சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார் இரண்டு வயது குழந்தையுடன் ஏழு மாதம் நிறைந்த கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : கணவன் நடத்தையில் சந்தேகம் 7 மாத கர்ப்பிணிபெண் 2 வயது குழந்தையோடு கிணற்றில் விழுந்து தற்கொலை.

Share via

More stories