பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன்   போதைப்பொருள் பறிமுதல்:

by Editor / 01-03-2024 04:48:19pm
  பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன்   போதைப்பொருள் பறிமுதல்:

மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னையை சேர்ந்த பயணியிடம் 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன்   போதைப்பொருள் பறிமுதல்:  சர்வதேச போதை கும்பல் தமிழகத்தை குடோனாக பயன்படுத்த தொடங்கியுள்ளது விசாரணையில் அதிர்ச்சி.

நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் போதை பொருள் கடத்தலை தடுக்க  போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார்‌ தீவிர கண்கானிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை  ( DIRECTOR REVENUE INTELLGENGE ) அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்கானித்து வந்தனர். 

சென்னையில இருந்து  - செங்கோட்டைக்கு  புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பேக்குடன் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் ஏறினார். அதிகாரிகளும் ரயிலில் பின் தொடர்ந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் மடக்கி பிடித்து இரண்டு லக்கேஜ் பேக்கை சோதனை செய்ததில்  போதைபொருள் 10 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலாகவும் மொத்தம் 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தது. உடனே (DRI) DIRECTOR REVENUE INTELLGENGE அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரயில் நிலைய காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதன் மதிப்பு 50 கோடி ரூபாய் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை கேகே நகர் பகுதியைச் சார்ந்த தமீம்அன்சாரி என்பவர் வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து தமிமுன் அன்சாரியின் வீட்டிலிருந்து பவுடர் வடிவிலான சுமார் 10 கிலோ மதிப்பிலான யூரியா, அசிட்டோன்,சோடியம்ஹைட்ராக்ஸைடு மற்றும் மெத்தாபெட்டமைன் ஆகியவை அடங்கிய பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தமீம் அன்சாரிக்கு சென்னையைச் சேர்ந்த அன்பு மற்றும் அருண் என்பவர்கள் நெருங்கிய நண்பர்கள்.சமீபத்தில் மதுரை வந்த அன்பு, ‘கெமிக்கல்’ என்றுக்கூறி போதைப்பொருளை வைத்துவிட்டு சென்றதாக தமீம் அன்சாரி போலீசாரிடம் கூறிய நிலையில் விசாரணை தீவிர படுத்தப்பட்டது. 

அன்பு, அருண்  இருவரும் நைஜீரியா நபர்களிடம் போதைப்பொருட்களுக்கான மூலப்பொருட்களை வாங்கி தமீம் அன்சாரி வீட்டில் பதுக்கி வைத்து வந்துள்ளனர்.வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப மதுரை வந்து தேவையான அளவு தயாரித்து எடுத்துச்சென்றுள்ளதும், ஒரு கிராமை ரூ.5 ஆயிரம் வரை விற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணையில் புதிய திருப்பமாக புழல் சிறையில்  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் உள்ள நைஜீரியர்களிடமும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தான் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை  ( DIRECTOR REVENUE INTELLGENGE ) அதிகாரிகள் 90 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பின்தொடர்ந்து வந்து பறிமுதல் செய்து பிரகாஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மெத்தப்பெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களிடம் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்த வழக்கில் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என்ன தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரம் கோடி மதிப்பு இருக்கக்கூடிய போதை பொருட்களை ஒரே இடத்தில் வைக்காமல், தமிழகத்தில்  பல்வேறு மாவட்டங்களில் பிரித்து பதுக்கி வைக்கப்பட்டு வருவது தற்பொழுது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மேலும் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கடல் வழியாக எளிதாக இலங்கை நாட்டிற்கு போதை பொருள்களை எளிதில் கடத்திச் செல்ல முடியும் என்பதனால் தமிழகத்தை சர்வதேச போதை கும்பல் குடோனாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.

 

Tags : பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன்   போதைப்பொருள் பறிமுதல்:

Share via