பிரதமர் மோடிக்கு பாஜக எம்எல்ஏ ரத்தத்துடன் கடிதம்

by Staff / 04-03-2024 11:22:33am
பிரதமர் மோடிக்கு பாஜக எம்எல்ஏ ரத்தத்துடன் கடிதம்

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் தொகுதியின் பாஜக எம்எல்ஏ நீரஜ் ஜிம்பா பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி சிலிகுரியில் கூர்க்காக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதாக அளித்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை என்றார். கூர்க்காக்களில் 11 சமூகக் குழுக்களுக்கு எஸ்டி அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார். கூர்க்காக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இவர்களுக்கு பிரதமர் மோடி நியாயம் வழங்குவார் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via