ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

by Staff / 15-03-2024 12:17:33pm
ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 14) வெளியிட்ட நிலையில் அதில் பத்திர எண்கள் விடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம், எஸ்பிஐ வங்கிக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தேர்தல் பத்திர எண்களை வெளியிட வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர எண்கள் இல்லாமல் எந்த நிறுவனம் வழங்கிய நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo