சொத்துக்காக தாயை கொலைசெய்த மகள்
மதுரை மாவட்டம் செக்கானூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரி. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றிய இவரது கணவன் இறந்துவிட வாரிசு வேலை பரமேஸ்வரிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பணிமனையில் வேலை பார்க்கும் சிவன்காளை என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இவரது சொத்துக்களை சிவன்காளையின் மகனுக்கு எழுதிவைக்க பரமேஸ்வரி முடிவெடுத்துள்ளார். இதனையறிந்த பரமேஸ்வரியின் சொந்த மகள் சிவரஞ்சனி தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சொத்தை தன் பேருக்கு எழுதி தராததால் தனது கணவர் மற்றும் கூட்டாளிகளுடன் இணைத்து தாயை கொலை செய்துள்ளார் சிவரஞ்சனி. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :