டி.எம்.கிருஷ்ணாவுக்கு செல்வப் பெருந்தகை வாழ்த்து

by Staff / 23-03-2024 03:43:27pm
டி.எம்.கிருஷ்ணாவுக்கு செல்வப் பெருந்தகை வாழ்த்து

எழுத்தாளர் மற்றும் கர்நாடக இசைப் பாடகர் டி. எம்.கிருஷ்ணாக்கு TheMusicAcademy-இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான இவருக்குள்ள அசாத்திய இசைத்திறமையின் அடிப்படையில்தான் விருது கொடுக்கப் படுகிறது. ஆனால், அவர் விருது பெறுவதில் குழப்பம் ஏற்படுத்தும் சிலரின் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. "வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறப்போம்" என்று மக்கள் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி கூறுவார். அதுபோன்று அனைவரின் மீதும் அன்பு செலுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via