ராட்சத அலையில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் பலி

by Staff / 28-03-2024 11:57:39am
ராட்சத அலையில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் பலி

செங்கல்பட்டு பவுஞ்சூர் அருகே வெஙவெங்கெங்கடாநகர் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் பிரவின், (16). செய்யூர் பகுர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நண்பகல் 1:15 ம மணிக்குகு, தன் பள்ளி நண்பர்களான முகமது முசாதிக் உள்ளிட்ட 12 பேருடன், செய்யூர் அடுத்த பனையூர்பெரியகுப்பம் கடற்கரைக்கு குளிக்கச் சென்றார். குளித்துக் கொண்டு இருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி, பிரவின் மற்றும் முகமது முசாதிக் இருவரும், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த அவர்களது நண்பர்கள் கூச்சலிட்டதால், அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள், கடலில் இறங்கி மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சிறிது நேரத்திற்கு பின், கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் இரண்டு பேரின் உடலும் கரை ஒதுங்கியது.

 

Tags :

Share via