மோடி ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு வருவது திமுகவிற்கே பிளஸ்-அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன்.

by Editor / 10-04-2024 05:41:44pm
மோடி ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு வருவது திமுகவிற்கே பிளஸ்-அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கிய அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், மோடி ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு வருவது திமுகவிற்கே பிளஸ் என அதிரடி பேட்டி

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து வீடு வீடாக துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வலுவான கூட்டணி எனவும், அந்த வகையில் தமிழகத்தில் வழங்கப்படக்கூடிய மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளதாகவும் தெரிவித்தார். மோடி ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு சுபிட்சமாக மாறும் எனக் கூறினார்.மேலும் அவர் பேசுகையில், மோடி ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு மோடி வருவது பாஜகவிற்கு மைனஸ், திமுகவிற்கு பிளஸ் எனவும் கூறினார்.

 

Tags : அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன்

Share via