தேர்தல் பணிக்காக சென்றபோது விபத்து - ஒருவர் பலி
சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அனிதா. சேலம், ஆத்தூர் அருகே வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்காக அனிதா தனது கணவர் ஜானி பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் அனிதாவின் சென்று கொண்டிருந்தார். அப்போது, தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைத்திடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி கணவர் ஜானி பிரகாஷ் பலியானார்.
Tags :