தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை

by Staff / 21-04-2024 01:00:36pm
தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை எனவும் அதிகபட்சமாக மத்திய சென்னையில் மட்டும் 6.22 லட்சம் பேர் ஓட்டு போட வரவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இது குறித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, ”இவ்வளவு பேர் வாக்களிக்காததால் அரசுகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனரோ என எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் ஆணையம் மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது” என்றார்.

 

Tags :

Share via