இந்தியா-சீனா இடையே உடன்பாடு

by Staff / 21-10-2024 03:52:46pm
இந்தியா-சீனா இடையே உடன்பாடு

பல வாரங்களாக இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தொடர் ராணுவ மற்றும் தூதரக மட்டத்திலான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எல்லை ரோந்து பணிகளில் ஒருமித்த உடன்பாடு ஏற்பட்டு இரு தரப்பிலும் வீரர்களை திரும்பப் பெற ஒப்புக்கொள்ளப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. நாளை ரஷ்யாவில் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், இரு நாடுகள் இடையே முக்கிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via