18 ஆண்டுகளாக உணவும், கல்வியும் வழங்கி வரும் தாசில்தார்

by Staff / 28-04-2024 04:07:45pm
18 ஆண்டுகளாக உணவும், கல்வியும் வழங்கி வரும் தாசில்தார்

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை சேர்ந்தவர் தாசில்தார் மாரிமுத்து. இவர் வறுமையின் காரணமாக போட்டி தேர்வுகளுக்கு படிக்க முடியாத மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகளை நடத்தி வருகிறார். இதுவரை பத்தாயிரம் பேரை பல்வேறு அரசு பணிகளில் பணியமத்தியிருக்கிறார். 18 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வு வகுப்புகளை நடத்தி வரும் இவர், மாணவர்களுக்கு கல்வியும் இலவச உணவையும் வழங்கி வருகிறார். அவரது இந்த செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.
 

 

Tags :

Share via