பாலத்திற்கு அடியில் கிடந்த சடலங்கள் - போலீஸ் விசாரணை

by Staff / 03-05-2024 01:39:30pm
பாலத்திற்கு அடியில் கிடந்த சடலங்கள் - போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே உள்ள பாலத்திற்கு அடியில் இன்று மூன்று சடலங்கள் கிடந்துள்ளன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கிருந்த மூன்று சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சமவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via