தீபக் ராஜா படுகொலை வழக்கில் 4 பேர் கைது

by Staff / 24-05-2024 12:09:07pm
தீபக் ராஜா படுகொலை வழக்கில் 4 பேர் கைது

திருநெல்வேலியில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் தீபக் ராஜா என்ற இளைஞர் கடந்த 20ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இரு சமுதாய இளைஞர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் நெல்லை மாவட்டமே பெரும் பதற்றத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தீபக் ராஜா கொலை தொடர்பாக முத்து சரவணன், ஐயப்பன், தம்பன் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் இன்று (மே 24) கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நவீன் பெயர் இடம்பெறவில்லை. மேலும், இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via