முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் வெட்டிக் கொலை

by Staff / 24-05-2024 12:18:17pm
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் வெட்டிக் கொலை

திண்டுக்கல் வேடப்பட்டியைச் சோ்ந்தவர் மாயாண்டி ஜோசப்(60). இவர் மதுபான பார் நடத்தி வந்தார். இவரது மனைவி நிர்மலா, அடியனூத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியாவார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், யாகப்பன்பட்டியிலுள்ள பார் அருகே மர்ம நபர்களால் நேற்று (மே 23) இரவு மாயாண்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.அதிமுக ஆட்சியின்போது, அந்தக் கட்சியில் பொறுப்பு வகித்த மாயாண்டி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவில் இணைந்தார். மணல், மதுபான விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த இவர், தொழில் போட்டி காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via