கொரோனவால் தாய் தந்தையை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம்

by Staff / 24-05-2024 02:38:14pm
கொரோனவால் தாய் தந்தையை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம்

நாடு முழுவதும் கொரோன அலை வீசியதில் பல்வேறு உயிர்கள் பலியாயின. தங்களது குடும்பங்களை இழந்து பல குடும்பங்கள் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த 382 குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.1 கோடியும், கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த 13,682 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.410.46 கோடியும், வங்கியில் வைப்பீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு என சமூகநலத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via