ஒரே இரவில் 3 கொலைகள்...காவல்துறை எப்போது விழிக்கும்....டிடிவி தினகரன்

by Staff / 28-05-2024 04:26:40pm
ஒரே இரவில் 3 கொலைகள்...காவல்துறை எப்போது விழிக்கும்....டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தள பதிவில், “சென்னை தாம்பரம் அருகே நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து 3 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டிய காவல்துறை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பது எப்போது? அவர்களை தட்டியெழுப்பி தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்றார்.

 

Tags :

Share via