28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.1,300 என விற்பனை.

by Editor / 11-06-2024 10:14:15am
28 கிலோ எடை கொண்ட  ஒரு கூடை தக்காளி ரூ.1,300 என விற்பனை.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பை நல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: அரூரில், கடந்த மாத இறுதியில், 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, ரூ.700 முதல் 800 ரவரை விற்பனையானது. தொடர்ந்து, 5ஆம் தேதி ஒரு கூடை தக்காளி, ரூ.1,000 என விற்றது. நேற்று மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கூடை தக்காளி ரூ.1,300 என விற்பனையானது.

தொடர் மழையால், செடிகளில் தக்காளி அழுகி வருவதால் அரூரிலுள்ள, தனியார் மண்டிகளுக்கு வரத்து சரிந்துள்ளது. தற்போது திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளால், தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணம் என்றனர்.

 

Tags : தக்காளி ரூ.1,300 என விற்பனை.

Share via