நீட் தேர்வு முறைகேடு- அதிர்ச்சித் தகவல்!

by Staff / 19-06-2024 05:22:10pm
நீட் தேர்வு முறைகேடு- அதிர்ச்சித் தகவல்!

பீகாரில் நீட் தேர்வு எழுதிய ஆயுஷ்ராஜ், அபிஷேக் குமார், சிவனந்தன் குமார் ஆகிய 3 பேருக்கு ஒரு நாள் முன்கூட்டியே வினாத்தாள் கிடைத்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. பாட்னா போலீசார் நடத்திய விசாரணையில் வினாத்தாள் முன்கூட்டியே கிடைத்ததை மாணவர் ஆயுஷ் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நீட் முறைகேட்டில் சிக்கிய மாணவர் ஒருவருக்கு பீகார் அமைச்சர் ஒருவர் உதவியதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via