கதறிய பெண்கள்.. கண்ணீர் சிந்திய இபிஎஸ்

by Editor / 20-06-2024 03:41:46pm
கதறிய பெண்கள்.. கண்ணீர் சிந்திய இபிஎஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இபிஎஸ் வந்த போது, அவர் காலில் விழுந்த பெண்கள் ”சின்ன சின்ன புள்ளைங்கெல்லாம் குடிக்குது சாமி. ஐயா... எங்களுக்கு இலவச அரிசி கூட வேணாம்.. இந்த சாராய கடையெல்லாம் தூக்கிடுங்க சாமி” என கண்ணீர்விட்டு கதறியவுடன் மனம் பொறுக்காமல் கண்ணீர் சிந்தி அழுதார்.

 

Tags : கதறிய பெண்கள்.. கண்ணீர் சிந்திய இபிஎஸ்

Share via