பேனரால் மூடப்பட்ட அரசுப் பேருந்து..அதிகரிக்கும் அவலம்.

by Editor / 24-06-2024 11:47:17pm
பேனரால் மூடப்பட்ட அரசுப் பேருந்து..அதிகரிக்கும் அவலம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்து மீது பேனரால் சுற்றி வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் சில நாட்களாக அரசு பேருந்தில் ஜன்னல்கள், படிக்கட்டுகள், மேற்கூரைகள் என எல்லாம் சேதம் அடைந்துள்ளது. அந்தவகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் மழை காலம் தொடங்கியுள்ளதால், பேருந்தின் மேல் பேனர் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.சாலையில் செல்வோர் அதிகாரிகளின் அறிவு சார்ந்த திறனால் அரசை குறைகூறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உடன் பிறப்புக்கள் கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.

 

Tags : பேனரால் மூடப்பட்ட அரசுப் பேருந்து..அதிகரிக்கும் அவலம்.

Share via