கல்லூரி மாணவி மர்ம மரணம்தொடர்புடையவர்கள்மீது கடும் நடவடிக்கை - டிடிவி தினகரன் 

by Editor / 25-06-2024 10:11:25pm
கல்லூரி மாணவி மர்ம மரணம்தொடர்புடையவர்கள்மீது கடும் நடவடிக்கை - டிடிவி தினகரன் 

 திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், உடல்நிலைக் குறைவு என நேற்று பிற்பகலில் தகவல் தெரிவித்த செல்வி. தாரணியை உடனடியாக பார்க்கச் சென்ற போது நீண்ட நேரம் காக்க வைத்ததோடு, இரண்டு மணி நேரம் கழித்து செல்வி.தாரணி தற்கொலை செய்து கொண்டதாக கூறிய கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவியின் தந்தை பாலாஜி திருச்சி சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.‌ எனவே, அந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தாரணியின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.

 

Tags : கல்லூரி மாணவி மர்ம மரணம்தொடர்புடையவர்கள்மீது கடும் நடவடிக்கை - டிடிவி தினகரன் 

Share via