மச்சினியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்த காமக்கொடூரன் அவரின் 10 வயது சிறுமிக்கும்  பாலியல் தொல்லை.

by Editor / 25-06-2024 10:51:41pm
மச்சினியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்த காமக்கொடூரன் அவரின் 10 வயது சிறுமிக்கும்  பாலியல் தொல்லை.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சார் (33). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை வைத்துள்ள தன்னுடைய மனைவியின் சொந்த சகோதரியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். மச்சினியுடன் தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த இவர், மச்சினி இல்லாத சமயத்தில் கடந்த சில மாதங்களாக அவரின் 10 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தனது தாயிடம் இதுகுறித்து கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த சிறுமி பாட்டியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின்பேரில் முகமது அன்சாரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags : மச்சினியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்த காமக்கொடூரன் அவரின் 10 வயது சிறுமிக்கும்  பாலியல் தொல்லை.

Share via