விசாரணையை தாமதப்படுத்தும் செந்தில் பாலாஜி

by Staff / 01-07-2024 02:37:40pm
விசாரணையை தாமதப்படுத்தும் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு விசாரணையை செந்தில் பாலாஜி தாமதம் செய்கிறார்.
விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்திலேயே செந்தில் பாலாஜி புதிய மனுக்களை தாக்கல் செய்கிறார் என அமலாக்கத்துறை கூறியுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தொடர்ந்த வழக்கில் உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை இவ்வாறு கூறியுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

 

Tags :

Share via