எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் மனு- நாளை உத்தரவு

by Staff / 04-07-2024 05:16:46pm
எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் மனு- நாளை உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தாக்கல் செய்த முன் ஜாமீன் மீதான உத்தரவு நாளை வழங்கப்படும் என கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், தற்போது இடைக்கால முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இடைக்கால முன் ஜாமீன் மனு மீதான உத்தரவு நாளை வழங்கப்படும் என என கரூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via