தண்ணீர் தொட்டியில் 3 சடலங்கள்.. அதிர்ச்சி சம்பவம்

by Staff / 08-07-2024 05:05:57pm
தண்ணீர் தொட்டியில் 3 சடலங்கள்.. அதிர்ச்சி சம்பவம்

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ், தனது மனைவி புஷ்பா மற்றும் 9 மற்றும் 3 வயது பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த தங்கராஜ், நேற்று  இரவு குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். அப்போது 9 வயது குழந்தையை கழுத்தை நெரித்து வீட்டில் முன் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளார். பின்னர் தாயும் 3 வயது குழந்தையும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கராஜை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via