தாய் மற்றும் மகனை அரிவாளால் வெட்டியவர் கைது.

by Staff / 23-05-2023 05:34:11pm
தாய் மற்றும் மகனை அரிவாளால் வெட்டியவர் கைது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்து மனைவி உமாதேவி என்பவர் தனது மகன் செல்லப் பாண்டியுடன் (27) வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் செல்லப்பாண்டி மது போதையில் உமாதேவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த செந்தில் (50) தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செந்தில், செல்லப்பாண்டி, உமாதேவியை அரிவாளால் வெட்டினார்.இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.

 

Tags :

Share via