13 மன நோயாளிகளை மீட்ட அதிகாரிகள்

by Staff / 09-07-2024 12:01:35pm
13 மன நோயாளிகளை மீட்ட அதிகாரிகள்

நீலகிரி மாவட்டம் குந்தலாடி பகுதியில் சட்டவிரோத காப்பகத்தில் இருந்து 13 மனநோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர். மனநோயாளிகளை அடைத்து வணிக ரீதியாக பணம் பெற்று வருவதாக எழுந்த குற்றசாட்டையடுத்து கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் குந்தலாடி காப்பகத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மீட்கப்பட்ட 13 பேரை கோவையில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற முதியோர் இல்லத்திற்கு அழைத்து செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via