தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

by Editor / 27-10-2023 11:27:56pm
தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

 நவ.1 முதல் பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை ஆகிய  விரைவு ரயில்கள் முழுமையாக செங்கோட்டையிலிருந்து மின்சார இன்ஜின் மூலம் சென்னை,மயிலாடுதுறை க்கு இயக்கப்படுகிறது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடுதுறை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் , இடையில் என்ஜின் மாற்றம் ஏதுமின்றி,மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக அடுத்த வாரம் நெல்லை -தென்காசி- மேட்டுப்பாளையம் மற்றும் செங்கோட்டை -மதுரை ரயில்களும் மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்பட உள்ளன. பகவதிபுரம் முதல் புனலூர் வரை உள்ள கேரளப் பகுதிகளில் மின்சார இணைப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால், கொல்லம், சென்னை-கொல்லம்-மதுரை-குருவாயூர்-மதுரை  ரயில்கள்  வழக்கம் போல மதுரை வரை டீசல் என்ஜின் மூலமாக இயக்கப்படும். எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எர்ணாகுளம் வழக்கம் போல் இயங்கும்.பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் வழக்கம் போல இயங்குமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

Share via