கனமழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் குறைந்து விலை உயர்வு..

by Editor / 17-07-2024 12:12:12pm
கனமழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் குறைந்து விலை உயர்வு..

சமையல் செய்யும் போது ஒரு சில காய்கறிகள் இல்லாமல் சமைத்து விடலாம். ஆனால் தக்காளி இல்லாமல் எந்த ஒரு சமையலும் இங்கு நடப்பதில்லை. அவ்வாறு இருக்கும்போது தக்காளி விலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரூ.40ஆக இருந்த தக்காளியின் விலை தற்போது ரூ.80ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே தமிழகத்திற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Tags : தக்காளி

Share via