எம். ஆர். விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

by Staff / 22-07-2024 05:00:31pm
எம். ஆர். விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

எம். ஆர். விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவு.சொத்து மோசடி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், 3 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தரப்பில் நீதிபதியிடம் அனுமதி கேட்டனர்.
எம். ஆர். விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை கேட்ட நீதிபதி பரத்குமார் இரண்டு நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

 

Tags :

Share via