கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி

by Staff / 23-07-2024 01:06:19pm
கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி

மதுரை, திருமங்கலம் அருகே சேர்ந்தவர் கருப்பு (32). லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜோதிமணி . கருப்புக்கு சில வருடங்களுக்கு முன் விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ஜோதிமணிதான் வேலைக்கு சென்று வந்தார்.இந்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே குடும்பதகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஜோதிமணி அடுப்பில் இருந்த வெந்நீரை தூக்கி கருப்பு மீது ஊற்றினார். இதில் அவரது உடல் முழுவதும் வெந்து போனது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via