வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 282ஆக உயர்வு.

by Editor / 01-08-2024 08:52:49am
வயநாடு நிலச்சரிவு  பலி எண்ணிக்கை 282ஆக உயர்வு.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 240 பேர் பற்றி எந்த தகவலும் இல்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முண்டகை மற்றும் சாலியாற்றில் இருந்து நேற்று 98 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 75 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 01) காலை முதல் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

 

Tags : வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 282ஆக உயர்வு.

Share via