கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி ஓட்டுநரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராமசாமி மனைவி ஜெயாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்த ஜெயாவின் கணவரை நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் முருகன் மரக்கட்டையால் தாக்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமசாமி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஓமலூர் போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி ஓட்டுநரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை