காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடியை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர் மாவட்டம் களப்பால் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புமாரிமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மனோ நிர்மல்ராஜ் என்பவர் நீடாமங்கலம் அருகே ஆதனூர் என்கிற இடத்தில் நின்று கொண்டிருந்த பொழுது அவரை பிடிக்கச் சென்ற காவலர் விக்னேஷை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மனோ நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார். மேலும் காயம் அடைந்த ரவுடியை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
Tags : காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடியை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர் மருத்துவமனையில் அனுமதி