காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஶ்ரீனிவாசன் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு,அடுத்தமாதம் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்ப்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Tags : காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.