"விஜய்யை பார்த்து திமுக ஏன் பயப்படுகிறது? - ஜெயக்குமார் கேள்வி

by Staff / 03-09-2024 03:43:29pm

சென்னையில் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் இன்று (செப்.3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மாநாடு நடத்த தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய் அரசியலுக்கு வந்தால் வாக்குகள் பிரியும் என திமுக பயப்படுகிறது. விஜய்யை நசுக்க நினைத்து சில விஷயங்களை செய்கிறது. விஜய்யை பார்த்து ஏன் திமுகவுக்கு பயம்?, யாராக இருந்தாலும் களத்தில் சந்திப்போம் என்ற தைரியம் திமுகவுக்கு இல்லை” என்றார்.
 

 

Tags :

Share via