5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தபொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள்.

by Editor / 12-09-2024 10:53:35pm
5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தபொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள்.

சென்னையிலிருந்து பிற பகுதிகளிலிருந்தும் தென் மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால், காலை 5 மணி முதல் கவுன்டரில் காத்திருந்த பயணிகளுக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்தான் கிடைத்துள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 10ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வோர் இன்று டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜன.11இல் பயணிப்போர் 13ஆம் தேதியும். ஜன. 12இல் பயணிப்போர் 14ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையன்று பயணம் மேற்கொள்வோர் செப். 15இல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தபொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள்.

Share via