நாதக நிர்வாகியை 30 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.‌

by Editor / 18-09-2024 10:33:22pm
நாதக நிர்வாகியை 30 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.‌

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் என்பவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தபெண்ணை  திருமணம் செய்ய முயன்றதால் அவர்  மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நாதக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருணகிரி (35) மற்றும் பிரவீன் குமார் (24), கார்த்தி (38) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த வளநாடு போலீசார் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மூவரையும் வருகிற 30 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி (பொருப்பு)பாலாஜி உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags : நாதக நிர்வாகியை 30 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.‌

Share via