41 கார்களை திருடிபாகம் பாகமாய் பிரித்து விற்ற மெக்கானிக் கைது.

வேலூர்மாவட்டம்,காட்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவா (எ) தேவக்குமார் (41) மேல் வடுகன் குட்டை பகுதியில் இவர் கார் மெக்கானிக் ஒர்க்ஸாப் வைத்துள்ளார். பகல் நேரங்களில் இவர் நகரப் பகுதிகளில் நோட்டமிட்டு இரவில் காரை திருடி வந்து இரவோடு இரவாக பிரித்து உதிரி பாகங்களை விற்பார் மேலும் திருட்டு கார்களை முழுமையாக அப்படியே போலி கார் எண்களை போட்டு விற்பனையும் செய்து விடுவார்.
இதுகுறித்து காட்பாடி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் காட்பாடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இன்று கார் மெக்கானிக் ஒர்க்ஸாப்பில் சோதனை செய்தனர்.இதில் 41 கார்கள் எந்த வித ஆவணமுமில்லாமல் ஒர்க்ஸாப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 27 கார்களை உதிரிபாகமாக வைத்திருந்தார். மீதமுள்ள கார்களையும் விற்க முயற்சி செய்துள்ளார். இதனால் காட்பாடி காவல்துறையினர் தேவா (எ) தேவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் கார் ஷெட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கார்களின் மதிப்பு ரூ.1.2 கோடியாகும் தமிழகம் முழுவதும் இது போன்று கார்களை திருடி இவர் மேலும் சில நண்பர்கள் வைத்து பிரித்து விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் மேலும் பலர் இந்த சம்பவத்தில் தொடர்ப்படையவர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Tags : 41 கார்களை திருடி வைத்து பிரித்து விற்ற மெக்கானிக் கைது.