டிரான்ஸ்போர்ட் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து-சிவகாசியில் பரபரப்பு.
சிவகாசி கிழக்கு காவல் நிலையம் அருகே உள்ள மேட்டூர் டிரான்ஸ்போர்ட் பட்டாசு குடோனில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் புகை சூழ்ந்ததால் அந்த பகுதியிலுள்ள மக்கள் அச்சமடைந்தனர். சம்பவம் அறிந்து அங்கு சென்ற சிவகாசி மற்றும் விருதுநகர், சாத்தூர் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.சிவகாசி டிஎஸ்பி பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் அங்கே சென்றனர். மக்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் தடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த டிரான்ஸ்போர்ட் பட்டாசு கிடங்கு சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மொத்தமாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் ஆட்களுக்கு ஏதும் காயம் உள்ளிட்டவைகள் இல்லாததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த விபத்தில் வடமாநிலங்களுக்கு அனுப்பக்கூடிய பலஇலட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு பண்டல்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : டிரான்ஸ்போர்ட்பட்டாசு குடோனில் திடீரென பயங்கர வெடி விபத்து.