அம்மன் திருவுருவப் படத்தில்  அணிவித்திருந்த நான்கு பவுன் தங்க நகையை  திருடியவன் கைது.

by Editor / 02-10-2024 10:49:14pm
 அம்மன் திருவுருவப் படத்தில்  அணிவித்திருந்த நான்கு பவுன் தங்க நகையை  திருடியவன் கைது.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் திருவுருவப்படத்தில் ஊர் சமுதாயம் சார்பில் நான்கு பவுன் தங்க நகை அணிவித்து வைத்திருந்தனர்.இந்த நிலையில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அம்மனின் திருவுருவ படத்தில் இருந்த நான்கு பவுன்தங்க நகை திருடு போனது.இது குறித்து கோவில் பூசாரி பழனி குமார்  பசுவந்தனை காவல் நிலையத்தில் புகார்அளித்தார். புகாரின் அடிப்படையில் பசுவந்தனை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில்  பசுந்தனை அருகே உள்ள அச்சங்குளம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ஜெயகணேசன் என்பது தெரியவந்தது. முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று  விசாரித்தனர். விசாரணையில் புங்கவர்நத்தம் காமாட்சி அம்மன் திருவுருவப்படத்தில் இருந்த தங்கநகை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நான்கு பவன் தங்க நகை மீட்டனர். கைதுசெய்யப்பட்ட அவனை ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்...
 

 

Tags :  அம்மன் திருவுருவப் படத்தில்  அணிவித்திருந்த நான்கு பவுன் தங்க நகையை  திருடியவன் கைது.

Share via