கொலை வழக்கில் தொடர்புடையவர் மீது துப்பாக்கிச் சூடு.

by Editor / 04-10-2024 09:58:48am
கொலை வழக்கில் தொடர்புடையவர் மீது துப்பாக்கிச் சூடு.

திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை அன்று இர்பான் என்பவர் பேருந்து நிலையம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் சச்சின் என்பவரை திண்டுக்கல் மாலைப்பட்டி சுடுகாடு பகுதியில் விசாரணைக்கு சென்றபோது தப்பிக்க முயன்ற ரவுடியை வலது கால் மூட்டு  பகுதியில் சுட்டு பிடித்து போலீஸ் . 

இர்பான் கொலை செய்துவிட்டு கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் இவர்கள் அணிந்திருந்த ஆடைகள்  பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்று 
ஆயுதங்களை எடுத்து கொடுக்கும்போது காவலர்களை எதிர்த்து தாக்கியுள்ளார் அப்போது ஆய்வாளர் வெங்கடாசலபதி மற்றும் காவலர்கள் அவரை எச்சரித்துள்ளனர். 

மேலும் அருண் என்ற காவலரை வெட்டி தாக்கியுள்ளார் இதைத்தொடர்ந்து எச்சரித்த போலீசார் அவரை வலது கால் மூட்டு  பகுதியில் சுட்டு பிடித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags : கொலை வழக்கில் தொடர்புடையவர் மீது துப்பாக்கிச் சூடு.

Share via